மலேசியத் தொடர்பு மற்றும் பன்முக ஊடக ஆணையம் (MCMC), பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறித்து தவறான மற்றும் அவமரியாதைக்குரிய டிக்டாக் பதிவுகளை வெளியிட்ட ஒரு பயனாளியிடமிருந்து கைபேசி மற்றும் சிம் கார்டைப் பறிமுதல் செய்துள்ளது.
அந்த நபர், நாட்டின் கட்சிகள் மற்றும் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அவதூறு பரப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சைபர்ஜெயா தலைமையகத்தில் நேற்று புகார் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பு மற்றும் பன்முக ஊடகச் சட்டம் 1998-இன் பிரிவு 233-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இக்குற்றத்திற்கு RM5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
சமூக வலைத்தளங்களில் இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்க MCMC கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.