லண்டன்: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவமானப்படுத்தி அனுப்பினார். தற்போது விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இப்படியான சூழலில் தான் உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவிடம் அமெரிக்கா தன்னிச்சையாக பேசி வருகிறது. இதற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ளாத நிலையில் அமெரிக்காவின் பவரை பிடுங்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் ஒரு செயலை முன்னெடுத்துள்ளனர். இதற்கு டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.