Offline
Menu
பலஸ்தீனத்துக்கு மலேசியாவின் ஆதரவு கொள்கைப் பொறுப்போடு – முகமட் ஹசன்
By Administrator
Published on 07/25/2025 09:00
News

பலஸ்தீன மக்களுக்கு மலேசியா வழங்கும் ஆதரவு அரசியல் நோக்கமற்றது, இது ஒரு கொள்கைப் அடிப்படையிலானது என வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் தெரிவித்தார்.

"ஹமாஸ் இயக்கத்திற்கே ஆதரவு அளிக்கிறோம் எனக் கேட்பவர்கள் உள்ளனர். ஆனால் நாங்கள் ஹமாஸ் அல்ல, பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நிற்கிறோம்," எனத் தெரிவித்தார்.

மலேசியா, ஐக்கிய நாடுகள் அமைப்பு, பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட மையங்களில் இஸ்ரேலின் கொடூரங்களை கண்டித்து பலஸ்தீனப் பிரச்சனையை உரிமையோடு வலியுறுத்தி வருகிறது.

பலஸ்தீன மக்களுக்கு சுயாதீன நாடு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாயகத்திற்குத் திரும்பி, முழுமையான அதிகாரம் கொண்ட நாடாக உருவாக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், ஐ.நா. பொதுச்சபையில், பாதுகாப்பு கவுன்சிலின் வாடோலை (veto power) சீர்திருத்த வேண்டிய தேவை குறித்து மலேசியா மீண்டும் தீர்மானம் முன்வைக்க உள்ளது.

பாலஸ்தீனில் அமைதிப் படைகளை அனுப்ப முடியவில்லை என்பதற்கான காரணமாக, பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி அவசியம் என்றும், பலஸ்தீன் என்றொரு சர்வதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இல்லாதது சட்டப்பூர்வமான தடையாக உள்ளது என்றும் கூறினார்.

"பலஸ்தீனத்தில் இப்போது சரியான எல்லைகள் இல்லாததால் அமைதிப்படைகளை எங்கு அனுப்புவது? அதனால்தான் இஸ்ரேல் எந்த நாட்டையும் கைப்பற்றவில்லை என பொய்யான வாதங்களை முன்வைக்கிறது," எனத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், மலேசியா 1960களிலிருந்து ஐ.நா அமைதிப் படைகளில் பங்கேற்று வருகிறது என்றும், தற்போது 860 பேர் அந்த பணியில் உள்ளனர் என்றும் கூறினார்.

Comments