Offline
2025 சிலாங்கூர் குழந்தை புத்தகக் கண்காட்சி தொடக்கம் –80,000 பேர் வரவுக்கு எதிர்பார்ப்பு.
By Administrator
Published on 07/27/2025 09:00
News

2025ஆம் ஆண்டு சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி இன்று சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழக வளாகத்தில் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் தொடங்கப்பட்டது. மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இக் கண்காட்சிக்கு 80,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.160 கண்காட்சியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (PPAS) மற்றும் யுனிவர்சிட்டி காலேஜ் MAIWP இன்டர்நேஷனல் (UCMI) உள்ளிட்ட நிறுவனங்களுடன் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.மந்திரி புசார், இமாம் அல்-கஸாலி பற்றி குழந்தைகளுக்கான புதிய புத்தகத்தை வெளியிட்டு கண்காட்சி பொருட்களையும் பார்வையிட்டார்.அவரது கூறலில், புத்தகங்கள் மட்டுமன்றி, குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி முயற்சிகளிலும் பலர் ஈடுபட்டு வருவதைப் பாராட்டினார்.

Comments