தேசியக் கொடிக்கு ஆதரவு தாருங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் வேண்டுகோள்
கோலாலம்பூர்: வரும் தேசிய தினம் மற்றும் மலேசிய தின கொண்டாட்டங்களுக்காக, '1 வீடு 1 ஜாலூர் கெமிலாங்' (ஒரு வீடு ஒரு தேசியக் கொடி) பிரச்சாரத்திற்கு அனைத்து மலேசியர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் அழைப்பு விடுத்துள்ளார்.
தேசபக்தி மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக தங்கள் வீடுகள், வாகனங்கள், அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களில் தேசியக் கொடியை பெருமையுடன் காட்சிப்படுத்துமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் தொடங்கி வைத்த இத்திட்டம், தேசபக்தியை வளர்த்து, சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதோடு, ஒற்றுமை உணர்வைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.