Offline
லோஜிங் மலைப்பகுதியில் திடீர் சோதனையில் 25 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் கைது.
By Administrator
Published on 07/30/2025 09:00
News

லோஜிங் மலைப்பகுதியில் இரு நாட்கள் நடைபெற்ற 'ஓப்ஸ் சாபு' செயல்பாட்டில் குடிவரத்துத் துறை 25 ஆவணமற்ற வெளிநாட்டவர்களை கைது செய்தது. மியான்மர் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் அடங்கிய இதில், 36 வெளிநாட்டவர்கள் சோதனையிடப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 14 மியான்மர் ஆண்கள், 6 மியான்மர் பெண்கள், 4 பங்களாதேஷ் ஆண்கள் மற்றும் 1 நேபாள ஆண் எனத் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் தனா மேரா குடிவரத்து அடைக்குமையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குடிவரத்து சட்டத்தின் பிரிவுகள் 6(1)(c) மற்றும் 15(1)(c) கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆவணமற்ற வெளிநாட்டவர்களை காப்பாற்றும் எவருக்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Comments