கிள்ளானில் ஜூலை 24 அன்று நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென் கிள்ளான் காவல்துறை துணைத் தலைவர் கமலாரிஃபின் அமன் ஷா தெரிவித்ததாவது, இரவு 11.15 மணியளவில் பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து இது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. தோட்டா உறைகள் கைப்பற்றப்பட்டுள்ளன; காரணம் தற்போது விசாரணையில் உள்ளது.1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் பிரிவு 39 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தகவல் உள்ளவர்கள் தெற்கு கிள்ளான் காவல் நிலையத்தை 03-3376 2222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.