Offline
சிறுமியை உலோக சுத்தியலால் தாக்கிய நபருக்கு தடுப்புக் காவல்.
By Administrator
Published on 07/30/2025 09:00
News

ஜோகூர் பாருவில், தாமான் உங்கு துன் அமீனா பகுதியில் 12 வயது சிறுமியை உலோக சுத்தியலால் தாக்கியதாக 39 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை 26 அன்று இரவு, சிறுமியின் தந்தை அளித்த புகாரையடுத்து அவர் வீட்டில் போலீசார் கைது செய்தனர். சந்தேக நபருக்கு போதைப் பழக்கம் மற்றும் பல குற்றப் பின்னணிகள் உள்ளதாகவும், சிறுநீரில் மெத்தம்பேத்தமைன் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலையில் காயம் மற்றும் கையில் வீக்கம் ஏற்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுப் பின் நிலைமை நிலையானதாக உள்ளது. இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324ன் கீழ் விசாரிக்கப்படுகிறது. லிப்டில் இரத்தம் கொட்டியபடி ஓடும் சிசிடிவி காட்சி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து சம்பவம் வெளிவந்தது. சந்தேக நபர் ஆகஸ்ட் 2 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments