Offline
Menu
இஸ்ரேல்–பலஸ்தீன இரு-மாநிலத் தீர்வுக்கு ஐ.நா.வில் தீவிரக் கோரிக்கை.
By Administrator
Published on 07/30/2025 09:00
News

பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியா நடத்தும் ஐ.நா. மாநாட்டில், இஸ்ரேல்–பலஸ்தீன பிரச்சனையில் இரு-மாநிலத் தீர்வு மட்டுமே சரியான வழி என வலியுறுத்தப்பட்டது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த மாநாட்டை புறக்கணித்த நிலையில், பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் “அமைதி மற்றும் பாதுகாப்புக்கு இரு-மாநிலத் தீர்வு தவிர மாற்று இல்லை” என கூறினார்.பாலஸ்தீன் பிரதமர் முஸ்தஃபா, உலக நாடுகள் பாலஸ்தீனத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், ஹமாஸ் காசாவிலிருந்து விலகி ஆயுதங்களை வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டேரஸ், இரு-மாநிலத் தீர்வு மிகவும் தொலைவில்தான் உள்ளது என சுட்டிக்காட்டினார்.அமெரிக்கா இந்த மாநாட்டை நேரமல்லாதது என விமர்சித்தது.இஸ்ரேலின் அகிரமணங்கள், குடியேற்ற விரிவாக்கங்கள் மற்றும் காசா போரின் விளைவுகள், பாலஸ்தீன இராச்சிய உருவாக்கத்தை மிகச் சிரமமாக்கி வருவதாகவும், மனிதாபிமான பேரழிவு ஆழமாகி வருவதாகவும் நாட்டு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Comments