Offline
90 கி.மீட்டர் துரத்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட இருவர்
By Administrator
Published on 08/06/2025 09:00
News

ஷா ஆலத்தைச் சுற்றி இன்று அதிகாலை கிட்டத்தட்ட 90 கி.மீ. அதிவேக துரத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர், சிலாங்கூர் காவல் தலைமையகத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டனர். ஒரு மணி நேர துரத்தலுக்குப் பிறகு புரோட்டான் வீராவில் கெத்தும் சாறு இருப்பதாக நம்பப்படும் ஒரு பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஷா ஆலம் காவல் தலைவர் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார். 24 வயதான அந்த ஓட்டுநருக்கு ஏற்கெனவே ஐந்து போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் இருந்தன. அதே நேரத்தில் 18 வயதுடைய இரண்டாவது சந்தேக நபருக்கு எந்த குற்றப் பதிவும் இல்லை.

அதிகாலை 1.30 மணியளவில் ஷா ஆலமில் உள்ள செக்ஷன் 7 வணிக மையத்தில் ஒரு போலீஸ் ரோந்து கார் நீல நிற புரோட்டான் வீராவைக் கண்டறிந்து அதன் ஓட்டுநரை நிறுத்த உத்தரவிட்டபோது இந்த சம்பவம் தொடங்கியதாக இக்பால் கூறினார். காவல்துறை அதிகாரிகள் தங்கள் சைரன் மற்றும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி ஓட்டுநரை நிறுத்த உத்தரவிட்டனர். ஆனால் ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில் வேகமாகச் சென்றதாக என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இதன் விளைவாக ஷா ஆலமைச் சுற்றி 90 கி.மீ. துரத்தல் நடந்தது. இதில் ஆறு போலீஸ் ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு, ஷா ஆலம், பிரிவு 9 இல் உள்ள சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு முன்னால் முடிந்தது.

ஒரு பொது ஊழியர் கடமையைச் செய்யத் தடுத்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 இன் கீழ் அந்த நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள். இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்கிறது. கெத்தும் சாறு வைத்திருந்ததற்காக விஷச் சட்டத்தின் பிரிவு 30(3) இன் கீழும் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, 100,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டையும் எதிர்கொள்கின்றனர்.

Comments