புத்ராஜெயா:
தேசிய உயர்கல்வி நிதி திட்டமான PTPTN தனது ஸியாரா காசி சிம்பான் SSPN திட்டத்தின் வாயிலாக SSPN சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தியவரான காலஞ்சென்ற பூவன் த/பெ ஆறுமுகத்தின் வாரிசுகளை பிரெசின்ட் 11, புத்ராஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். 52 வயதான அரசு ஊழியரான பூவன் கடந்த ஜூன் 25, 2025 அன்று மரணமடைந்தார்.
தகாபுல் நலத் திட்டத்தின் வாயிலாக அவரது குடும்ப சுமையை குறைக்கும் வாய்ப்பு கிடைத்தது. உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் பிரெசின்ட் 11இல் உள்ள பூவனின் இல்லத்திற்குச் சென்று, அவரது மனைவி வி. சிவகாமிக்கு (48) ஆறுதல் கூறினார். அவர், தகாபுல் பாதுகாப்பு மரண Œகாய நிதிக்கான அதிகாரபூர்வ பத்திரத்தையும் காப்புறுதி நலத்தொகை குறிப்பிடப்பட்ட மாதிரி காசோலையையும் பூவன் குடும்பத்துக்கு ஒப்படைத்தார்.
PTPTN தலைவர் டத்தோ’ ஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹீம், PTPTN தலைமை செயல் அதிகாரி அகமட் தசூகி அப்துல் மஜித், உயர்கல்வி தலைமைத்துவ கழக இயக்குநர் (AKPET) டாக்டர் ஹர்ஷிதா ஐனி பிந்தி ஹருன், PTPTNஉயர் நிர்வாக குழுவினர் உள்ளிட்டோரும் இந்த வருகையில் இடம்பெற்றிருந்தனர்