Offline
Menu
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 307 ஆக உயர்வு
By Administrator
Published on 08/18/2025 09:00
News

லாகூர்,பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கைபர் பக்துவா மாகாணத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கனமழை, வெள்ளத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. வரும் 21ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Comments