ஒட்டாவா:கனடாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் கனடா. இதில் சுமார் 10 ஆயிரம் பணிப்பெண்கள் வேலை பார்க்கின்றனர்.
அவர்கள் சம்பள உயர்வு, விமானத்தில் செலவழித்த நேரத்துக்கு ஏற்றாற்போல் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
எனவே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.