Offline
5 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் காவலில் இறந்த மகன் கெவினுக்கு நியாயம் கேட்கும் தந்தை
By Administrator
Published on 08/19/2025 09:00
News

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் காவலில் இருந்தபோது நிகழந்த கெவின் மரணத்திற்கு காரணமானதாகக் கூறப்படும் கைதிகள் மீது வழக்குத் தொடருமாறு மறைந்த ஜி ஜெஸ்டஸ் கெவின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், சட்டத்துறை அலுவலகத்தை வலியுறுத்தியுள்ளார். பகாங், பெந்தோங்கில் உள்ள போலீஸ் லாக்கப்பில் பணியில் இருந்த அதிகாரிகள், கெவினை அவரது அறையில் இரண்டு கைதிகள் தாக்கிய பிறகு கவனிக்காமல் விட்டுச் சென்றதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.விஸ்வநாதன் கூறினார். இது கடந்த மாதம் கெவின் மரணம் தொடர்பான விசாரணையின் போது சிசிடிவி காட்சிகளில் காணப்பட்டது.

விசாரணையின் போது, தாக்கப்பட்ட பிறகு கவனிக்கப்படாமல் இருந்த கெவினை, போலீசார் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரேத பரிசோதனை அதிகாரி சஸ்லினா ஷாஃபி கூறினார். இரண்டு கைதிகள் மீதும் கொலை அல்லது கொலைக்கு சமமானதல்லாத குற்றச்சாட்டை சுமத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் மீது “பொருத்தமான குற்றச்சாட்டுகள்” சுமத்தப்பட வேண்டும் என்றும் விஸ்வநாதன் கூறினார். மரணத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது காவல்துறை ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றும் அவர் கேட்டார்.

விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகளில், கிழிந்த போர்வைத் துண்டுகளைப் பயன்படுத்தி இரண்டு கைதிகள் கெவினின் கைகளையும் கால்களையும் கட்டியிருப்பதை சட்டத்துறை அலுவலகம் வழங்கியதாக விஸ்வநாதன் கூறினார். மேலும், துணியால் வாயை மூடி கைதிகள் அவரை அடித்தனர். அப்போது பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் கைதிகளுக்கு போர்வையை வழங்கியதாகவும், கெவினை அடிக்க அவர்களை ஊக்குவித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கம், காவல்துறை  சட்டத்துறை அலுவலகம் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். இங்கே, என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். சிசிடிவி பதிவுகள் எங்களிடம் உள்ளன என்று அவர் இங்கு ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இறந்தவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏதாவது ஒரு வகையில் நீதி வழங்கப்பட வேண்டும்.

கெவினின் தந்தை ஏ. கணப்பிரகாசம், தனது மகன் கோவிட்-19 காரணமாக மூச்சுத் திணறலால் இறந்துவிட்டதாக போலீசார் தன்னிடம் கூறியதாகவும், இந்த விஷயத்தை மேலும் தொடர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். கெவினின் உடல் ஏற்கெனவே மருத்துவமனையின் பிணவறைக்கு அனுப்பப்பட்டதாகவும் போலீசார் பொய் சொன்னதாகவும் அவர் குற்றம் சாட்டினார். (கெவின்) இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்களுக்கு நீதி வேண்டும் என்று அவர் கூறினார்.

Comments