71ஆவது தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருது வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஜி.வி. பிரகாஷ் வாத்தி பட பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றார். விருது பெற்றது குறித்து ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது:-
எனக்கு வாத்தி பட பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. விருது வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோசம். இது என்னுடைய 2ஆவது தேசிய விருது. ரொம்ப ஹேப்பியாக உள்ளது. சூரரை போற்று படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்காக கிடைத்தது. வாத்தி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தனுஷ், படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் எனது நன்றி.
இவ்வாறு ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார்.
உள்ளொழுக்கு மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருது வாங்கியது தொடர்பாக ஊர்வசி கூறியதாவது:-
விருது வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோசம். எனக்கு இது 2ஆவது விருது. இரண்டு விருதுகளையும் பெண் ஜனாதிபதியிடம் இருந்து வாங்கியுள்ளேன். இந்தியாவின் உயரிய பதவியில் இருக்கும் இரண்டு பெண் ஜனாதிபதியிடம் இருந்து வாங்கியதை பெருமையாக நினைக்கிறேன். மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம்.
இவ்வாறு ஊர்வசி தெரிவித்தார்.
ஊர்வசி பிரதீபா பாட்டீல் மற்றும் திரவுபதி முர்மு ஆகியோர் கைகளால் விருது வழங்கியுள்ளார்.