ஜோகூர் பபாரு :
மலேசியாவுக்குள் வருவதற்கு வாகன நுழைவு அனுமதி (Vehicle Entry Permit – VEP) பெறாமல் வந்த சுமார் 4,000 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு, இதுவரை RM1.173 மில்லியன் (சுமார் $360,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதங்கள், 2025 ஜூலை 1 முதல் அக்டோபர் 20 வரை அமல்படுத்தப்பட்டன என ஜோகூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறையின் மூத்த அமலாக்க இயக்குநர் முகமட் கிஃப்லி மா ஹசான் தெரிவித்தார்.
அபராதங்களில் பெரும்பாலானவை சுல்தான் அபு பக்கார் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் வளாகத்தில் (Sultan Abu Bakar CIQ Complex) பதிவாகின. அங்கு 2,064 வழக்குகள், மேலும் சுல்தான் இஸ்கந்தர் சுங்க வளாகத்தில் 1,765 வழக்குகள், தாமான் தயா பகுதியில் 81 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு வழக்கிற்கும் RM300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28 நிலவரப்படி, 3,148 ஓட்டுநர்களுக்கு அபராதக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்ததாக பெரிதா ஹரியான் தெரிவித்தது. அதன் பின்னர் மூன்று வாரங்களில் 760க்கும் மேற்பட்ட புதிய அபராதக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.