Offline
Menu
VEP அபராதம் செலுத்தப்படாவிட்டால் சிங்கப்பூர் வாகனங்கள், ஓட்டுநர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறுவதை JPJ தடை செய்யும்
By Administrator
Published on 11/01/2025 14:52
News

ஜோகூர் பாரு: நவம்பர் 15 முதல், வாகன நுழைவு அனுமதி (VEP) பெறாத அல்லது செயல்படுத்தாத வெளிநாட்டு வாகன உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்கள், குறிப்பாக சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள், நிலுவையில் உள்ள அனைத்து அபராதங்களும் செலுத்தப்படும் வரை மலேசியாவை விட்டு வெளியேறுவது தடைசெய்யப்படும் என்று சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) தலைமை இயக்குநர் ஐடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார். VEP இல்லாத, காலாவதியான VEP உள்ள அல்லது முன் பதிவு நிலையில் இருக்கும் தனியார் வாகனங்கள் மற்றும் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்கள் இரண்டையும் முழு அமலாக்கம் உள்ளடக்கும் என்று அவர் கூறினார்.

அபராதங்கள் விதிக்கப்படும், மேலும் வாகன உரிமையாளர்கள் மலேசியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவற்றைத் தீர்த்து VEP பதிவை முடிக்க வேண்டும். மலேசியா-சிங்கப்பூர் எல்லையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நேற்று இரவு சுல்தான் இஸ்கண்டா  கட்டிடம் (BSI) வெளியேறும் இடத்தில் VEP சிறப்பு அமலாக்க நடவடிக்கையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

JPJ அலுவலக முகப்பிடங்கள், மொபைல் JPJ முகப்பிடங்கள், டங்கா பே பகுதியில் உள்ள VEP பதிவு முகப்பிடம் அல்லது myEG மூலம் ஆன்லைனில் அபராதங்களைக் கட்டலாம் என்று அவர் மேலும் கூறினார். முன்னர், வெளிநாட்டு வாகன ஓட்டுநர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு சம்மன், எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்குவது அமலாக்கத்தில் அடங்கும் என்று அவர் கூறினார்.ஆனால் இப்போது முழு அளவிலான அமலாக்கத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

முன்னர், எங்கள் செயல்பாடுகள் ஜோகூரில் மட்டுமே இருந்தன. ஆனால் அவை இப்போது நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்படுகின்றன. மலேசியாவில்  VEP இல்லாமல் காணப்படும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வாகனமும் அதே அமலாக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

ஜூலை 1 ஆம் தேதி VEP அமலாக்கம் தொடங்கியதிலிருந்து, தனியார் வாகனங்களில் மொத்தம் 303,183 ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) டேக்குகள் நிறுவப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கூடுதலாக 31,643 டேக்குகள் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

அதே காலகட்டத்தில், அதிகாரிகள் 55,486 வாகனங்களை ஆய்வு செய்து, VEP இல்லாத உரிமையாளர்களுக்கு 4,028 அபராதங்களை விதிக்கப்பட்டது. அதன் மொத்தத் தொகை 1.2 மில்லியன் ரிங்கிட் என்று அவர் மேலும் கூறினார்.

Comments