Offline
Menu
புலம்பெயர்ந்தோர் படகு விபத்து: மேலும் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டதால், இறப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது
By Administrator
Published on 11/11/2025 14:50
News

லங்காவி:

லங்காவி புலம்பெயர்ந்தோர் படகு விபத்தில் மேலும் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து,இறந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

தேடல் குழுக்கள் தங்கள் நடவடிக்கையை விரிவுபடுத்தியதால், மலேசியா-தாய்லாந்து கடல் எல்லையின் மலேசியப் பக்கத்தில் பல இடங்களில் சமீபத்திய சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கெடா மற்றும் பெர்லிஸ் மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (MMEA) இயக்குனர் முதல் அட்மிரல் ரோம்லி முஸ்தபா கூறுகையில், முதல் ஒரு சிறுவனின் உடல், மதியம் 12.47 மணிக்கு, தஞ்சுங் பெலுவாவிலிருந்து தென்மேற்கே இரண்டு கடல் மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.

“சில நிமிடங்களுக்குப் பிறகு, ராயல் மலேசிய கடற்படை (RMN) கப்பல் கடலில் மிதக்கும் ஒரு ஆணின் உடலைக் கண்டுபிடித்தது, அது MMEA ஜெட்டிக்கு கொண்டு வரப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை புலாவ் ரெபக் பெசாருக்கு வடமேற்கே மூன்று கடல் மைல் தொலைவில் ஒரு பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தது, அது ஹார்பர் பார்க் ஜெட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பின்னர் பிற்பகல் 3.31 மணிக்கு மற்றொரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அது MMEA ஜெட்டிக்கு மாற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து அருகிலுள்ள இடத்தில் ஐந்தாவதாக ஒரு ஆணின் உடல் – கடல்சார் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்து உடல்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று வர கூறினார்.

Comments