கோலாலம்பூர்:
BUDI MADANI RON95 எனும் மக்கள் நலன் பேணும் உதவித் தொகை பெற்ற பெட்ரோலை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் மைகார்டை பலர் அப்படியே விட்டுச் சென்றுவிடுகின்றனர்.
RON95 பெட்ரோல் நிரப்புவதற்கு மைகார்டு எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு மைகார்டை திரும்பப் பெற்று செல்வதும் முக்கியமாகும்.
பொறுப்பற்றவர்களின் வசம் மைகார்டுகள் சிக்கி அதனால் ஏற்படக்கூடிய துன்பங்களை தவிர்ப்பதற்கு மறவாமல் மைகார்டை திரும்ப பெற்று செல்லுங்கள் என்று மடானி அரசாங்கம் பொது மக்களுக்கு நினைவூட்டியது.