Offline
Menu
PM பதவிக்கு 10 ஆண்டுகள் கால வரம்பு: புதிய சட்டம் வருகிறது
By Administrator
Published on 01/07/2026 08:00
News

அரசியல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் ஒருவர் பதவியில் இருப்பதால் ஏற்படும் அதிகாரக் குவிப்பைத் தவிர்க்க இது உதவும் என்று அன்வார் இப்ராஹிம் கருதுகிறார்.

நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பதால், எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் அரசு கோரியுள்ளது.

இந்த மாற்றம் மலேசிய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று பல தொண்டு நிறுவனங்கள் பாராட்டியுள்ளன. அண்டை நாடான இந்தோனேசியாவிலும் இதே போன்ற முறை நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments