மலேசியாவில் தைப்பூசத் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், பினாங்கு தண்ணீர் மலை திருத்தலத்தில் 'குஸ்கோப் மதானி' (KUSKOP MADANI) எனும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசியக் கூட்டுறவு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சு (KUSKOP) சார்பில் இந்த ஆண்டு பக்தர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் மற்றும் சேவைகள் வழங்கப்பட உள்ளன.
பினாங்கு தைப்பூசப் பாதுகாப்பிற்காக 1,280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய ஏதுவாகப் பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தண்ணீர் மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துச் செய்தியில், தைப்பூசம் என்பது மலேசியாவின் பன்முகத்தன்மையின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார். பினாங்கில் நடைபெறும் இந்த விழாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர்.