தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தின் தணிக்கை விவகாரம் ஒருபுறம் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்க, மறுபுறம் தென்னிந்தியத் திரையுலகில் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஆர்ஆர்ஆர் (RRR) நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதிக்கு இன்று (ஜனவரி 31) இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சினிமா அப்டேட்ஸ் என்று பார்த்தால், விஜய்-எச்.வினோத் கூட்டணியின் 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழா குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் வினோத் பேசுகையில், "தளபதிக்கு முடிவு என்பதே கிடையாது, இது ஒரு புதிய ஆரம்பம்" என்று கூறியது விஜய் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள 'AA23' படத்தில் ஸ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் முதல்முறையாக இணைவது தென்னிந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.