மலேசியா மற்றும் இந்தோனேசியா இடையிலான எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய அளவீடுகளுக்குப் பிறகு, மலேசியாவிற்கு கூடுதலாக 780 ஹெக்டேர் நிலப்பரப்பு கிடைத்துள்ளதாக பிரதமர் டான் ஸ்ரீ அன்வர் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சபா-கலிமந்தன் எல்லையில் உள்ள மூன்று கிராமங்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக மலேசிய எல்லைக்குள் வந்துள்ளன.
மலேசியா தனது நிலப்பரப்பை இந்தோனேசியாவிற்கு விட்டுக் கொடுத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த புகார்கள் தவறானவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை என்று பிரதமர் சாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைப் பேணிக்கொண்டே, நாட்டின் இறையாண்மையை உறுதி செய்வதில் மலேசியா உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.