கனடா அரசு தனது 'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' (Express Entry) குடிவரவு முறையில் இன்று புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சி, சுகாதாரம், விமானப் போக்குவரத்து மற்றும் ராணுவத் துறையில் அனுபவம் உள்ள வெளிநாட்டுத் திறமையாளர்களை ஈர்க்க அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு ராணுவ வீரர்களும் கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற இந்தப் புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
கனடாவின் இத்தகைய நடவடிக்கை நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், தகுதியான நபர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க பாதுகாப்பு சோதனைகள் கடுமையாக்கப்படும் என்றும் கனடா குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஆஸ்திரேலியாவில் இன்று வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிக்கையில், அந்நாட்டின் வேலைவாய்ப்பு விகிதம் நிலையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை அதிகரிப்பதைத் தவிர்க்க உதவும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.