கெடாவின் புக்கிட் காயூ ஈத்தாம் எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை மலேசிய சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமையின் (MCBA) மூத்த அதிகாரி முகமது நசருதீன் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதிகாலை 6:30 மணியளவில் அவர் தொழுகைக்காகத் தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.
அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் அந்த அதிகாரிக்குக் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் எல்லையோரப் பாதுகாப்பில் நிலவும் அச்சுறுத்தல்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. போலீசார் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.