காசா பகுதியில் நிலவி வரும் கடுமையான உணவு மற்றும் மருத்துவப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், சர்வதேச மனிதநேய ஆர்வலர்களால் அனுப்பப்பட்ட "குளோபல் சுமுத் புளோடில்லா" (Global Sumud Flotilla) என்ற உதவிக்கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் இஸ்ரேலிய கடற்படையினரால் இடைமறித்துச் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கிரீட் தீவுக்கு அருகில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கப்பலின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1,000 மனிதநேய ஆர்வலர்கள் மற்றும் டன் கணக்கிலான அவசரக்கால நிவாரணப் பொருட்களுடன் கடந்த ஏப்ரல் இறுதியில் சிசிலியிலிருந்து புறப்பட்ட இந்த கப்பல், காசாவின் 18 ஆண்டுகால கடற்படை முற்றுகையை உடைக்கும் நோக்கில் பயணித்தது. ஆனால், இஸ்ரேலிய இராணுவம் தங்களது நவீன போர்க்கப்பல்கள் மூலம் இந்த உதவிக்கப்பல்களைத் தடுத்து நிறுத்தித் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் உறுதிப்படுத்தியுள்ளது.
கப்பல் பிடிபட்ட சமயத்தில் அதன் செயற்கைக்கோள் மற்றும் ரேடியோ தகவல் தொடர்புச் சாதனங்கள் முற்றிலும் முடக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சிறைபிடிப்பு நடவடிக்கைக்குப் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.