Offline
Menu

LATEST NEWS

தவெகவில் 4 எம்.எல்.ஏக்களுக்கு புதிய பொறுப்பு வழங்கி விஜய் உத்தரவு
By Administrator
Published on 07/04/2026 08:00
News

தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியில் அமைப்பு ரீதியாக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முனிரத்தினம்: உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

ரெட்டியார்பட்டி நாராயணன்: நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர், திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

மரியை ஜான்: பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

ஆர்.எஸ். முருகன்: திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர், திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

அபிஷேக்: போலூர் சட்டமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

சட்டமன்ற தேர்தல் முடிந்து தவெக ஆட்சி பிடித்த பின்னர் கட்சியைப் பலப்படுத்தும் விதமாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கட்சியில் புதிதாக இணைந்து வெற்றி பெற்ற சுமார் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதில் முதற்கட்டமாக 5 நபர்களுக்கு இந்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கட்சியில் நீண்ட காலமாக (ரசிகர் மன்ற காலம் முதல்) உழைத்த மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடையாத வண்ணம், பிற தொகுதிகளுக்கான நியமனங்கள் குறித்து கட்சித் தலைமை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments