Offline
Menu
அர்மடா நிதி முறைகேடு வழக்கு தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்திற்கு வந்த சையத் சாதிக் !
By Administrator
Published on 07/14/2026 10:00
News

புத்ராஜெயாவில் உள்ள நீதி துறை வளாகத்திற்கு (Palace of Justice) இன்று காலை 8.30 மணியளவில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், அர்மடா (Armada) நிதி முறைகேடு தொடர்பான தனது இறுதித் தீர்ப்பை அறிந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார்.

அர்மடா இளைஞர் பிரிவின் ஒரு மில்லியன் ரிங்கிட் நிதி நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள 33 வயதான இவருடன், அவரது பெற்றோர் மற்றும் வருங்கால மனைவி நடிகை பெல்லா அஸ்தில்லாவும் உடன் வந்திருந்தனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் இவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்த நிலையில், அதனை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று காலை வழங்கவுள்ளது.

முன்னதாக, 2023-இல் உயர் நீதிமன்றம் இவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, இரண்டு பிரம்படிகள் மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இறுதித் தீர்ப்பு அவர் சிறைக்குச் செல்வாரா அல்லது விடுதலையாவாரா என்பதைத் தீர்மானிக்கும் என்பதால் மலேசிய ஊடகங்களும் அவரது ஆதரவாளர்கள் அங்கு பெரும் திரளாகக் கூடியுள்ளனர்.

Comments