மலேசிய ஏர்லைன்ஸ் விமானி கைது விவகாரம்
25 கிலோ கிராம் எடையுள்ள ‘எக்ஸ்டஸி’ போதைப்பொருள் மாத்திரைகளைக் கடத்த முயன்ற குற்றத்திற்காக மலேசிய ஏர்லைன்ஸ் (MAS) விமானி ஒருவர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) பல அடுக்கு பாதுகாப்புகளை மீறி அந்த போதைப்பொருள் எவ்வாறு கடத்தப்பட்டது என்பது குறித்து மூத்த விமானிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
மலேசிய விமான நிலையங்களின் நிர்வாகமான MAHB, பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையங்கள் இச்சம்பவத்தில் பாதுகாப்பு வீழ்ச்சி எங்கு ஏற்பட்டது என்பது குறித்துத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
17,000 பறக்கும் மணிநேரப் அனுபவம் கொண்ட மலேசிய ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமைப் பணிப்பெண் மற்றும் விமானியுமான டத்தோ கேப்டன் நிக் அகமட் ஹுஸ்லான் கூறுகையில்: “கேள்வி என்னவென்றால், இங்குப் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளதா என்பதல்ல; நிச்சயமாக இருக்கிறது. ஆனால், இவ்வளவு பலத்த பாதுகாப்பு அடுக்குகளையும் மீறி அந்தப் பை எவ்வாறு உள்ளே சென்றது என்பதுதான்.”
அல்லது விமான ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு விமானத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு விரைவான பரிசோதனை நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சலுகையைப் பயன்படுத்திச் சட்டவிரோத கும்பல்கள் விமானப் பணியாளர்களைக் கடத்தலுக்குப் பயன்படுத்துகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட வழக்கமான பரிசோதனைகளை விட, எதிர்பார்க்காத வகையில் நடத்தப்படும் திடீர் மற்றும் சீரற்றப் பரிசோதனைகளே இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு மூத்த விமானி தெரிவித்துள்ளார்.
தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆண்டிற்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், நவீன செயற்கைப் போதைப்பொருட்களைக் கண்டறியப் போதுமானதாக இல்லை என விமானத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.