Offline
Menu
மருத்துவரை போல் ஆள் மாறாட்டம் செய்த 14 வயது சிறுமி போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்
Published on 08/12/2024 03:05
News

கோலாலம்பூர்: கடந்த வியாழன் அன்று செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் (HSIS) மருத்துவராக அத்துமீறி நுழைந்து ஆள்மாறாட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட 14 வயது சிறுமி இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கமாருல், விசாரணையின் போது, ​​மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு ஊழியராக தனக்கு விரைவான மருத்துவ சிகிச்சை கிடைக்குமா என்பதைப் பார்க்க அந்த இளம்பெண் அவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தோ அல்லது புகழ் பெற வேண்டும் நோக்கில் அச்செயலை செய்யவில்லை  என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.

பொது ஊழியராக அத்துமீறி நுழைந்து ஆள்மாறாட்டம் செய்ததற்காக குற்றவியல் சட்டம் 448 மற்றும் 170 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். விசாரணை அறிக்கை முடிந்ததும் மேல் நடவடிக்கைக்காக துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

கடந்த வியாழன் அன்று மருத்துவ மருத்துவராக ஆள்மாறாட்டம் செய்ததற்காக HSIS லாபியில் சிறுமி கைது செய்யப்பட்டார். அவளிடம் இருந்து ஸ்க்ரப்ஸ் மற்றும் மருத்துவமனை லேன்யார்டையும் போலீசார் கைப்பற்றினர். ஆரம்ப விசாரணையில் அவர் தன்னை ஒரு மருத்துவர் என்று கூறி, அறுவை சிகிச்சைக்கு உதவ முன்வந்தார். இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் நீதிமன்ற உத்தரவு இன்றுடன் முடிவடைந்தது.

Comments