Offline
10 வயது மகனை வாகனமோட்ட அனுமதித்த தாயாருக்கு 700 ரிங்கிட் அபராதம்
News
Published on 09/10/2024

தாமான் அரோவானா இம்பியானில் செப்டம்பர் 3 ஆம் தேதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டுவதற்கு தனது 10 வயது மகனை அனுமதித்த பெண்ணுக்கு இன்று போக்குவரத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 700 ரிங்கிட் அபராதம் விதித்தது. 46 வயதான பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி மர்லிசா ஃபஹ்மி இந்த தண்டனையை வழங்கினார். அபராதத்தை செலுத்த முடியாவிட்டால் ஒரு வாரம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். துப்புரவு பணியாளராக பணிபுரியும் பிரதிவாதி, செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஜாலான் அரோவானா 2, தாமான் அரோவானா இம்பியானில் டொயோட்டா கொரோலாவை ஓட்டுவதற்கு தனது 10 வயது மகனை அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

17 வயதுக்குட்பட்ட ஒருவரை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 39(5)ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அரசு துணை வக்கீல் எம்.புஸ்பா வழக்கு தொடர்ந்தார். பெண் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. குற்றவாளி தனது குழந்தையை வாகனம் ஓட்ட அனுமதித்து பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதால், தகுந்த தண்டனையை விதிக்குமாறு புஸ்பா நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

பிரதிவாதி மாதத்திற்கு 1,500 ரிங்கிட் சம்பாதிப்பதாலும் அவரின் மூன்று  குழந்தைகள் பள்ளிக்கு செல்வதால் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியிருப்பதால், மன்னிப்புக் கோரினார். வழக்கின் உண்மைகளின்படி, சிறுவன் தனது தாயின் காரை நிறுத்தியிருந்த வேன் மற்றும் பெரோடுவா கான்சில் மீது மோதியுள்ளார். சம்பவம் நடந்த போது சிறுவனின் ஒன்பது வயது அண்டை வீட்டுக்காரர் பயணிகள் இருக்கையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.

 

Comments