Offline
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது பெங்களூரு
News
Published on 10/17/2024

தமிழ்நாட்டில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் வடதமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

கொட்டும் கனமழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரு நகரில் இன்று பெய்த கனமழையால் சாலைகள் முழுக்க வெள்ளக்காடாகின. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து பெங்களூருவிற்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Comments