Offline
போப் பிரான்சிஸ் மறைவு- 9 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
By Administrator
Published on 04/22/2025 16:58
News

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்.போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும் ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் தனது கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.ரோமுக்கு செல்லும்போதெல்லாம் சான்டா மரியா மேகியார் பசிலிகாவுக்கு செல்வதை போப் வழக்கமாக வைத்திருந்தார்.பொதுவாக போப்பாக உள்ளவர்கள் சைப்ரஸ், ஈயம் மற்றும் கருவாலி மரத்தால் ஆன பேழையில் அடக்கம் செய்யப்படுவார்கள்.ஆனால், போப் பிரான்சிஸ் ஜிங்க-ஆல் பூசப்பட்ட சவப்பெட்டியில் தன்னை அடக்கம் செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது.100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.மேலும், போப்பின் இறுதிச் சடங்கிற்கு 2 அல்லது 3 வாரங்களுக்குப் பிறகு புதிய போப்பை தேர்தந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.புதிய போப்பை தேர்ந்தெடுக்க கார்டினல்கள் சிஸ்டைன் ஆலயத்தில் கூடுவார்கள். ரகசிய பரிமாணம் செய்து ரகசிய வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள்.80 வயதிற்குட்பட்ட கார்டினல்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது.புதிய போப்பை தேர்ந்தெடுக்க மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை. ஒவ்வொரு வாக்கெடுப்புக்குப் பிறகும், வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படும்.பின்னர் பெரும்பான்மையை பொருத்து புதிய போப் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments