வியட்நாமின் வடக்கு மலைப்பகுதியான பாக் கான் மாகாணத்தின் பா பெ மாவட்டத்தில் நேற்று காலை, கடும் மழைக்கு பிறகு ஏற்பட்ட மலைச்சரிவில் நால்வர் உயிரிழந்தனர்.சனிக்கிழமையன்று பெய்த கனமழையால், மலையின் மேற்பகுதியில் இருந்து மண், கல் மற்றும் நீர் வெடிப்பு போல சத்தத்துடன் சரிந்தது என உள்ளாட்சித் தலைவர் தியூ ஸுவான் தாய் தெரிவித்தார்.
அந்த மலையில் கடந்த சில ஆண்டுகளாக 2 மீட்டர் அகலமான விரிசல் இருந்தது என்றும் மக்கள் எச்சரிக்கைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என மாகாண நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல், ஆறுகள், நீரோடைகள் அருகே உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஆய்வுகளை உடனே மேற்கொள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.