Offline
சூப்பர் லீக்கில் விளையாட தகுதி இழந்த கெடா மற்றும் பேராக்.
By Administrator
Published on 05/24/2025 09:00
Sports

2025-2026 மலேசிய சூப்பர் லீக் சீசனில் பங்கேற்க, தேவையான தேசிய உரிமத்தை பெறத் தவறியதால், கெடா மற்றும் பேராக் அணிகள் தற்போது தகுதியற்ற நிலையை எதிர்கொள்கின்றன.நிதி ஒழுங்கு முறைகளில் குறைபாடுகள் காரணமாக, மலேசிய கால்பந்து லீக் (MFL) முதல் நிலை நிறுவனம் உரிமத்தை நிராகரித்துள்ளது.கெடா A1 அரைத் தொழில்முறை லீக்கில் விளையாட விண்ணப்பித்திருக்கும் நிலையில், பேராக் பற்றிய நிலைpas தொடர்ந்தும் குழப்பத்தில் உள்ளது.AFL தலைவர் யூசூப் மஹாடி, A1 லீக் கெடா மற்றும் பேராக் போன்ற அணிகளுக்குத் தங்களை மீண்டும் கட்டமைக்க உதவும் மேடையாக இருக்கும் என கூறினார்.மேலும், 11 அணிகள் உரிமம் பெற்றுள்ள நிலையில், சில அணிகள் நிபந்தனைகளுடன் உரிமம் பெற்றுள்ளன. மெலாக்கா மற்றும் குடிநுழைவு அணிகள், சிறப்புச் சலுகை மூலம் சூப்பர் லீக்கில் சேர அனுமதிக்கப்பட்டுள்ளன.

Comments