Offline
கே.எல்.ஐ.ஏ.-வில் அபூர்வ விலங்குகள் கடத்தல்: இருவர் கைது.
By Administrator
Published on 05/24/2025 09:00
News

பெட்டாலிங் ஜெயா: மலேசிய எல்லைக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனம், புதன்கிழமை KLIA டெர்மினல் 1-ல், 300-க்கும் மேற்பட்ட அபூர்வ விலங்குகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற இரு மலேசிய ஆண்களை கைது செய்தது.

காலை 6.30 மணிக்கு நடத்திய சோதனையில், அந்த இருவரின் பைகளைச் சோதித்ததில் நீல இகுவானா, சிவப்பு காதுக் கடா, சவானா மானிட்டர், நைல் மானிட்டர், கஸ்கஸ், கருப்புக் கழுத்து மானிட்டர் உள்ளிட்ட பல அபூர்வ விலங்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் RM460,000 ஆகும். விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த விலங்குகளை கடத்த எவ்வித அனுமதி ஆவணங்களும் இருவரிடமில்லை என நிறுவனம் தெரிவித்தது.

Comments