சேவை வழங்குநர்களே தீர்மானிக்க அனுமதி!
மலேசியாவில் மின்சார வாகனங்களுக்கு (EV) மின்னேற்றம் செய்வதற்கான கட்டணங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை என்றும், சேவையை வழங்கும் நிறுவனங்களே தங்களது கட்டணங்களைத் தீர்மானித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் மலேசிய முதலீட்டு, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சு (MITI) தெரிவித்துள்ளது.
தனியார் துறையின் முதலீடுகளை ஈர்க்கவும், மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டுச் சேவைத் துறையில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விளக்கமளித்துள்ளது.
நாடாளுமன்ற செனட்டர் ராபர்ட் லாவ் ஹுய் இயூ எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்ற இணையத்தளத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அமைச்சு பின்வரும் விவரங்களை வெளியிட்டது: சந்தைப் போட்டித்தன்மைக்கு ஏற்பச் சேவை வழங்குநர்களே கட்டணங்களைத் தீர்மானிப்பதன் மூலம், நாடு முழுவதும் பொது இடங்களில் ‘EV’ மின்னூட்டு வசதிகளை விரிவுபடுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
மின்னேற்றுச் சாதனங்களின் எண்ணிக்கை மே 31, 2026 நிலவரப்படி, மலேசியா முழுவதும் மொத்தம் 6,416 EV மின்னேற்றுச் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.