முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பைடன் தலைமையிலான அரசு, ரஷிய அதிபர் புதினை கொலை செய்ய முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷிய போர் 3 ஆண்டுகள் நீடிக்கிறது; பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் முடிவுக்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மத்தியஸ்தமாக செயல்படுகிறது, ஆனால் தீர்வு இல்லை.
சமீபத்தில், புதின் குர்ஸ்க் ஓபிளாஸ்ட் பகுதியில் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்ட போது, உக்ரைனின் டிரோன் தாக்குதல் நடந்ததற்கான தகவல்கள் வந்துள்ளன. ரஷிய வான் பாதுகாப்பு தளபதி யூரி டாஷ்கின், புதினின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு தாக்குதல் தடுக்கப்பட்டதாக கூறினார். உக்ரைன் இதற்கு எந்தவித பதிலும் வழங்கவில்லை.
ரஷிய அதிபர் செய்தியாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புதின் பாதுகாப்பு மிக வலுவாக இருப்பதாக உறுதி செய்தார்.