கோலாலம்பூரில் உள்ள பாலர் நிலையத்தில் உயிரிழந்த 7 மாத குழந்தை, உணவு மற்றும் பால் மூச்சுக்குழாயில் சிக்கி மூச்சுத் திணறி இறந்ததாக பிரேத பரிசோதனை உறுதி செய்தது. இந்த வழக்கு குழந்தை சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. குழந்தை முஅம்மர் அத்லி திங்களன்று நினைவிழந்த நிலையில் காணப்பட்டு, 11.08amக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. சமூக நலத்துறை, உரிமம் பெற்ற நிலையம் எனத் தெரிவித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.