ஜாலான் கெபுன் சுல்தான் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மோதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கிளந்தான் போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர். கோத்த பாரு காவல்துறைத் தலைவர் ரோஸ்டி தாவூட், சண்டையின் வீடியோ நேற்று மதியம் 1.40 மணியளவில் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
காவல்துறை புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் மே 23 அன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் 25 வினாடிகள் கொண்ட வீடியோவில், இரண்டு கார்களில் இருந்து இறங்கி சம்பவ இடத்தில் பலரைத் தாக்கும் ஒரு கும்பலைக் காண முடிந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சம்பவம் குறித்து ஊகிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் விசாரணைக்கு உதவ சாட்சிகள் முன்வருமாறு வலியுறுத்தினார்.