சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், ஆயிரம் கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். “அத்தனை பணத்தில் உண்மைத் தருணங்களுடன் 20-30 படங்கள் எடுப்பேன்” எனக் கூறியுள்ளார். கிரீன் ஸ்கிரீன், (காட்சியமைப்பு விளைவுகள்)குறைவான படங்களை மட்டுமே இயக்க விரும்புகிறார். ‘இறைவி’, ‘ஜிகர்தண்டா’ போன்ற உண்மைத் தன்மையுள்ள படங்களால் பெயர் பெற்ற அவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார்.