Offline
தெங்கு ஜஃப்ருலின் ராஜினாமா கடிதத்தை அம்னோ இன்னும் பெறவில்லை – அசிரஃப் வாஜ்டிகோலாலம்பூர்
By Administrator
Published on 06/01/2025 09:00
News

அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸிடமிருந்து பதவி விலகல் கடிதத்தை இன்னும் அம்னோ அதிகாரப்பூர்வமாகப் பெறவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறினார்.

PKR சேருவதற்காக, கோத்தா ராஜா அம்னோ பிரிவுத் தலைவராக இருக்கும் ராஜினாமா செய்வதை அம்னோ தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்று, வெள்ளிக்கிழமை (மே 30) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

“ஒற்றுமை அரசாங்கத்திற்குள் உள்ள எந்தவொரு கட்சியும் மற்ற கட்சிகளின் உறுப்பினர்களிடமிருந்து உறுப்பினர் விண்ணப்பங்களை பாகுபாடற்ற முறையில் ஏற்றுக்கொள்வது மிகவும் பொருத்தமற்றது. இது ஒற்றுமை அரசாங்க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை தூண்டக்கூடும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், நேற்று வெள்ளிக்கிழமை தெங்கு சஃப்ருல் அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர், கோத்தா ராஜா அம்னோ பிரிவுத் தலைவர் மற்றும் அம்னோ உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Comments