பிரான்ஸ் அணியான PSG, ஐரோப்பாவின் சிறந்த கிண்ணமான யூரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கை வென்று தனது நீண்டநாள் கனவை நனவாக்கியது. லூயிஸ் என்ரிக்கே தலைமையிலான PSG, இறுதிப்போட்டியில் இண்டர் மிலானை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டத்தை தட்டி சென்றது.
திசையர் டோயே இரு கோல்கள் அடிக்க, ஹகிமி, க்விச்சா மற்றும் மயுலு தலா ஒரு கோல் வீசியனர்.
இந்த வெற்றிக்கு பிறகு, PSG-வின் முன்னாள் நட்சத்திரமான கிலியன் எம்.பாப்பே தனது சமூக ஊடகத்தில்,
"பெரும் நாள் வந்துவிட்டது. PSG-க்கு வாழ்த்துகள்!" எனக் கூறினார்.
2017 முதல் 2024 வரை PSG-வில் விளையாடிய எம்.பாப்பே, 256 கோல்களுடன் கிளப்பின் மிக அதிகம் கோல்கள் அடித்த வீரராக உள்ளார். PSG-க்கு ஆறு லீக் கோப்பைகளையும் அவர் வழங்கியுள்ளார்.