2018-ல் வெளியான 'வடசென்னை' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், 'குபேரா' இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், அடுத்த வருடம் 'வடசென்னை 2' படத்தின் பூஜை தொடங்கும் என்று அறிவித்தார். வெற்றிமாறன் இதற்கு முன்பு வாடிவாசல் படத்திற்குப் பிறகு தனுஷுடன் இணைவதாகக் கூறியிருந்தது 'வடசென்னை 2' படத்திற்காகத்தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் படங்களைத் தொடர்ந்து இந்த கூட்டணியின் அடுத்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.