கன்னட மொழி குறித்து தவறாகப் பேசினால் ஏற்க முடியாது என்றும், நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நடிகை சுதாராணி தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் 'தக் லைப்' பாடல் வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கர்நாடகாவில் கண்டனங்கள் எழுந்த நிலையில் சுதாராணி இவ்வாறு கூறியுள்ளார்.