மச்சாங் அருகே பாங்கோல் ஜுதா கிராமத்தில் நேற்று இரவு மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டு ஆக உயர்ந்துள்ளது.12 வயது முகம்மது ஜக்வான் அப்துல்லா, முதலில் உயிரிழந்த ஜுல்கிப்லி சலே ஹ் ஓட்டிய காரில் பயணித்தவர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்தார்.மொத்தமாக 12 பேர் காயமடைந்து மச்சாங் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். விபத்தில் பிக்கப் டிரக் மற்றும் இரண்டு கார்கள் மோதியதால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தன.