இந்த ஆண்டில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு புத்தகப் பற்றுச்சீட்டு வழங்க அரசு விரிவுபடுத்தியது என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார். பள்ளி மற்றும் பல்கலை மாணவர்களில் வாசிப்புப் பண்பை வளர்ப்பதே இதன் நோக்கம். உயர்கல்வி நிறுவனங்களுக்கும் புத்தகச் சீட்டுகள் வழங்கும் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார். பெற்றோர்கள் வார இறுதியில் பிள்ளைகளுடன் சேர்ந்து புத்தகம் படிக்க ஊக்குவிக்க வேண்டும்; ஆனால் முதலில் உள்ளடக்கத்தை புரிந்து கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.