கோலாலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் மோட்டார் சைக்கிளோட்டிகள் இடையே கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதல் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் சுலிஸ்மி அபென்டி கூறினார். சம்பவம் தொடர்பான புகார் வராத போதும், வைரலான வீடியோ அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.