சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான கேதர்நாத் கோவில் மே மாதம் 2-ஆம் தேதி திறக்கப்பட்டு, அப்போது முதல் 7 லட்சம் கனக்கான பக்தர்கள் வந்துள்ளனர். இமயமலையில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்த இந்த கோவில், வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறக்கப்படுகிறது.மே 31-ம் தேதி வரை சுமார் 1,39,444 யாத்திரிகள் குதிரை மற்றும் கோவேறு கழுதை வழியாக தரிசனம் செய்தனர். கேதர்நாத் யாத்திரை பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்களையும் சேர்த்த நான்கு புனித தல யாத்திரையில் ஒன்றாகும். இந்த புனித இடங்களுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.