Offline
தியாகப் பெருநாள்: நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது
By Administrator
Published on 06/07/2025 09:00
News

நாளை கொண்டாடப்படும் தியாகப் பெருநாள் கொண்டாடத்தை முன்னிட்டு இன்று காலை நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சீராக இருப்பதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

காலை 10 மணி நிலவரப்படி தலைநகரிலிருந்து கிழக்கு தெற்கு நோக்கி போக்குவரத்து சீராக இருப்பதாகவும் நண்பகலுக்குப் பின் நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் பொதுமக்கள் போக்குவரத்துத் தகவல்களை PLUSLine என்ற X தலத்தில் அல்லது LLM லைன் மற்றும் @llmtrafik என்ற X தலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Comments